News

தமிழ் சினிமாவில் அப்படி ஒன்றும் நடிக்கவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒன்றில் ஹேமா கமிட்டியை போன்று அனைத்து மொழி சினிமா துறையிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டுமா என்று கேள்வி கேட்க பட்டது.

இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அப்படி ஏதும் தவறுகள் நடக்கவில்லை. அப்படி ஏதும் நடந்து இருந்தால் வெளிப்பட்டு இருக்கும். அதனால் ஹேமா கமிட்டி போல ஒன்று தமிழ் சினிமாவில் தேவையில்லை.

தமிழ் திரையுலகம் நன்றாகத்தான் இருக்கிறது. நான் தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து இருக்கிறேன். இந்தி மொழியிலும் நடித்திருக்கிறேன். நான் இதுவரைக்கும் அது மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை. தவறுகள் நடக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

பெண்கள் பாதுகாப்பு என்பது மிக முக்கியம். பெண்களுக்கு எதிராக ஏதேனும் தவறுகள் நடந்தால் கடுமையாக தண்டிக்கப்பட்ட வேண்டும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி ஏதும் நடிக்கவில்லை.

 

Trending

Exit mobile version