News

எனக்கும் படங்கள் தியேட்டரில் வெளியானல்தான் பிடிக்கும் – ஐஸ்வர்யா ராஜேஷ் !

Published

on

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரம் நடித்துள்ள படம் திட்டம் இரண்டு. இந்த திரைப்படம் ஓடிடி தளமான சோனி லைவ்-வில் வெளியாகிறது.

இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியது:- என் சினிமா பயணத்தில் முதல் முறையாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் மர்டர் மிஸ்டரி திரில்லர் வகை படத்தில் நடிக்கிறேன். உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது. உயிர்தோழி ஒருவர் காணாமல் போகிறார். அதை விசாரிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலையை செய்தது யார் என்பதுதான் படத்தின் மொத்தக்கதை.

போலீஸ் வேடமாக இருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும். பெண் போலீசாக இல்லாமல் காதல், எமோஷனல் என எல்லாவற்றையும் காட்ட வேண்டிய ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். கொரோனா காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு சினிமா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும் தியேட்டர்களில் படம் வெளியாகத்தான் ஆசை. ஆனால் தற்போதைய சந்தர்ப்ப சூழ் நிலை அதற்கு சாதகமாக இல்லை. ஒரு படம் நன்றாக இருந்தால் போதும் தியேட்டர் ரிலீஸ் இல்லாவிட்டாலும் ரசிகர்களிடம் நன்றாக சென்று அடைகிறது.

ஒரு படத்தை முழுமையாக எடுத்து விட்டு வெளியிடாமல் இருந்தால் அது தயாரிப்பாளருக்கு பலத்த இழப்பை கொடுக்கும்.சூர்யா நடித்த சூரரை போற்று, நான் நடித்த க/பெ.ரணசிங்கம் மற்றும் ஆர்யாவின் சார்பட்ட பரம்பரை போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக மிகப்பெரிய ஹிட் அடித்தன என்று கூறினார்.

Trending

Exit mobile version