News

மீண்டும் வில்லன் பாதி ஹீரோ பாதி கதையில் அஜித் குமார் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்டபார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பெரியளவில் படம் வெற்றியடையவில்லை.

இந்தியில் வெளியான பிங் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இது வெளிவந்தது. படத்தில் அஜித்துக்காக எச்.வினோத் செய்த சில மாற்றங்கள்தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து வலிமை படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் இருவரும் அனைத்து படப்பிடிப்புக்குகளும் முடிவடைந்து தொலிநுட்ப பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கள் பண்டிகைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத்துடன் இணைந்துதான் பணியாற்ற போகிறார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.இதை தயாரிப்பாளர் போனிகபூர் உறுதியும் செய்துள்ளார்.

இந்த படம் மங்காத்தா சாயலில் உருவாகவிருப்பதாகவும் இதில் அஜித்குமார் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பில்லா, மங்காத்தா படங்களில் அஜித் நடித்த எதிர்மறையான வில்லன் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version