News

ரசிகர்களுக்கு மீண்டும் அறிவுரை கூறிய அஜித் குமார் !

Published

on

நடிகர் அஜித் குமார் என்னதான் சமூக வலைத்தளத்தில் இல்லையென்றாலும் தன் ரசிகர்களுக்கு சொல்ல விரும்பும் கருத்துக்களை இவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் கூறிக்கொண்டுதான் வருகிறார்.

அந்த வகையில் இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் சுரேஷ் சந்திரா அதில் ‘ உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களையும் உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களையும் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். நெகட்டிவிட்டி வேண்டவே வேண்டாம். பெரிய லட்சியங்களை அடைய முயற்சி செய்யுங்கள் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக வாரிசு – மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியாகவுள்ளதை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான வார்தைகளால் மோதி வருகிறார்கள். அப்படி மோதும் தன் ரசிகர்களுக்குதான் இந்த அறிவுரை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version