News

உருட்டு மீடையுடன் மிரட்டும் அருள்நிதியின் புதிய தோற்றம் !

Published

on

வம்சம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருள் நிதி அப்படத்தை தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளில் மட்டுமே இன்று வரையில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மவுனகுரு திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. உதயன், தகராறு, ஆறாது சினம், பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது அருள் நிதி கைவசம் டைரி, டி பிளாக், தேஜாவு என 3 படங்கள் வைத்துள்ளார். இதில் டி பிளாக் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் ராஜ் இயக்கதில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் தோற்றம் வெளியாகியுள்ளது. அதில் முரட்டு மீசையுடன் முறைத்தபடி மிரட்டலாக உள்ளார்.

Trending

Exit mobile version