News

யானை படத்தின் அடுத்த கட்ட பணியில் அருண் விஜய் !

Published

on

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யானை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம்தான் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இந்தநிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ராதிகா டப்பிங் பணியை முடித்திருந்தார்.

தற்போது இப்படத்தின் ஹீரோவான அருண் விஜய் தனது டப்பிங் பணியை நேற்று ஆரம்பித்துள்ளார். இன்றும் நாளையும் இவரின் டப்பிங் பணிகளை தொடர்ந்து செய்வார் என்று கூறப்படுகிறது.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரப்போவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அருண் விஜய்யுடன் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரக்கனி, யோகிபாபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version