Connect with us
 

News

வழக்கம் போல இதுவும் வெறும் வதந்திதான் – அஞ்சலி !

Published

on

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அஞ்சலி. அதனை தொடர்ந்து பல தமிழ் திரைபப்டங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். இவரின் நடிப்பில் வெளியான இறைவி படத்தின் மூலம் இவருக்கு இந்த அளவுக்கு நடிக்க தெரியுமா என்று அனைவரும் வாய் மேல் விரல் வைக்க வைத்தார்.

அஞ்சலி இறுதியாக தெலுங்கில் வெளியான பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அஞ்சலி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் பரவி வந்தது. அஞ்சலி திருமணம் குறித்து அடிக்கடி இது போன்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இது பற்றி அஞ்சலி கூறியதாவது:- வழக்கம் போல இதுவும் பொய்யான தகவல் வெறும் வதந்தியே. தற்போது நான் என் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்து வருகிறேன். திருமணம் குறித்து நான் இப்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவுள்ளேன் என்று கூறினார்.