News

கிருத்தியா உதயநிதி படத்திலிருந்து விலகிய காரணத்தை கூறிய அஷ்வின் !

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலக புகழ் பெற்றவர்க்களில் அஷ்வின். பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இவரின் கதவை தட்ட ஆரம்பித்தது.

அப்படிதான் தயாரிப்பாளர் ரவீந்தரன் தனது தயாரிப்பு நிறுவனதுக்கு மூன்று படங்கள் நடித்து கொடுக்க வேண்டும் கூறி 30 லட்சம் சம்பளம் கொடுத்து இவரை கமிட் செய்துள்ளார்.

இதை தவிர கிருத்திகா உதய நிதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அஷ்வின் ஆனல் என்ன ஆனதோ தெரியவில்லை அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அஷ்வின் விலகியதும் அவருக்கு பதிலாக நடிகர் ஜெயராம் மகனான காளிதாஸ் அப்படதில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஒரு நேர்கானலில் அவர் கூறியது அப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் படக்குழு இதனை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார். எனக்கு வெள்ளித்திரையில் நடிகராகத்தான் வரவேண்டும் என்று ஆசை இதனால்தால்தான் அதிலிருந்து நான் விலகிவிட்டேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக கூறினார்.

Trending

Exit mobile version