News

அட்லீ – ஷாருக்கான் இணையும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி வெளியீடு !

Published

on

ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. முதல் படத்திலயே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்தவர். அதனை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார்.

இதனையடுத்து பாலிவுட் பக்கம் இவர் பார்வை திருப்பியது. அங்கு ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. ஆனாலும் எந்தவோரு அதிகார்வபூர்வ தகவல் வெளியாகவில்லை. அட்லீ கொடுத்த கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னாராம் ஷாருக்கான். அதன் பின்னர் ஷாருக்கான் விருப்பத்திற்கு மாற்றி அந்த கதைக்கு ஷாருக்கானை ஓகே வாங்கிவிட்டாராம்.

ஷாருக்கான் தற்போது நடித்து வரும் பதான் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version