News

பாரதி கண்ணம்மா வில்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது !

Published

on

சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கே தற்போது அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனாவுக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.அந்தத் தொடரில் கதாநாயகிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு வில்லி பாத்திரத்திற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் வெண்பா அடிக்கடி தனது புகைப்படங்கள், ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரை வெண்பா தொடர்ந்து சீரியலில் நடித்துவந்தார்.இந்நிலையில் நடிகை ஃபரீனா ஆசாத்திற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Trending

Exit mobile version