News

காதலன் ஏமாற்றி விட்டதாக பிக்பாஸ் ஜூலி போலீஸ் புகார் !

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரில் ஜூலியும் ஒருவர். இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மிகவும் புகழ்பெற்ற ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அங்கு சென்ற ஜூலி மிகவும் மோஷமான போட்டியாளர் என்ற பெயருடன் பிக்பாஸ் வீட்டை விட்டும் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் வருகிறார். தற்போது இவர் சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version