News

நரகாசூரன் படத்தின் வெளியீட்டுக்கு நடிகர்கள் செய்த மிகப்பெரிய உதவி !

Published

on

துருவங்கள் 16 என்ற ஆகச் சிறந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இப்படத்தை தொடர்ந்து நரகாசூரன் என்ற படத்தை இயக்கி வந்தார். அரவிந்த சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்தனர்.

படப்பிடிப்பை சொன்ன தேதிகளுக்குள் முடித்தும் கெளதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த படம் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது.

இது தொடர்பாக கார்த்திக் நரேன் மற்றும் கெளதம் மேனன் இருவரும் இடையே கருத்து வேறு பாடு வந்தன. என்னதான் மூன்று வருட காலதாமதம் ஆனாலும் இந்த படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது காரணம் இந்த படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பும் ஒரு காரணம்.

ஒரு வழியாக இந்த படத்தின் மீதுவுள்ளா எல்லா பொருளாதார பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் தற்போது வெளியாக காரணம் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்புத்தான் மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. இதில் நடித்த அரவிந்த சுவாமி, சந்தீப் கிஷான் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு இன்னும் வழங்கப்பட இருந்த சம்பளத்தின் பெரும்பகுதியை வேண்டம் என்று சொல்லி தயாரிப்பாளரின் நிதிச்சுமையை குறைத்துள்ளனராம்.

Trending

Exit mobile version