News

பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் போலீஸ் புகார் கொடுத்த பாபி சிம்ஹா !

Published

on

நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் 13 சென்ட் நிலம் ஒன்றை வைத்துள்ளார். இதில் வீடு கட்டி வருகிறார் தற்போது. கட்டுமான பணிகளை கொடைக்கானலைச் சேர்ந்த ஜமீர், காசிம் முகமது செய்து வந்தனர்.

இவர்களுக்கும் பாபி சிம்ஹாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டது. வேலைகலை விரைவில் முடிக்க சொல்லி பாபி சிம்ஹா கூறிய போது அப்போது கோபமடந்த பாபி சிம்ஹாவை தரக்குறைவாக பேசியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இவர்களுடன் அதே ஊரைச்சேர்ந்த உசைன், பேத்துபாறையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரும் மிரட்டியுள்ளனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றம், அசிங்கமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஸ்.ஜ.கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

Trending

Exit mobile version