Connect with us
 

News

விக்ரம் பட குழுவினருக்கு நடு வானில் நடந்த திக் திக் நிகழ்வு !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் இவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருகின்ரனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு டார்ஜிலிங் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டனர்.

துருவ் உட்பட படக்குழு இதற்காக 90 நபர்கள் கொண்ட குழு சென்னையிலிருந்து டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்டு 55 நிமிடங்களில் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு சிறிய அதிர்வு உண்டானது.

இதனால் பதற்றம் அடந்தனர் அனைத்து பயணிகளும். இதற்கு மேல் விமானம் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை சென்னைக்கே திரும்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன் பின்னர் மறு நாள் இன்னோரு விமானத்தின் மூலம் படக்குழுவினர் டார்ஜிலிங் சென்றனர்.