News

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அரசு அறிவிப்பு !

Published

on

இம்மாதம் 25ம் தேதி டெல்லியில் தாதா சாகேப் விருது வாங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதற்கான டெல்லி பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விழா அக்.25ம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை டெல்லியில் நடைப்பெறுகிறது.

Trending

Exit mobile version