Connect with us
 

News

விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் தேசிங்கு பெரியசாமி ?

Published

on

துல்கர் சல்மான், ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை இளம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிவிருந்தார்.

இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டினார். மேலும் ரஜினிகாந்த் தனக்காக ஒரு கதையை ரெடி செய்யுமாறும் கூறினார். தற்போது தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்திடம் ஒரு கதையை கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி விஜய்யிடன் ஒரு படத்தின் கதையை கூறியிருப்பதாகவும் அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ரஜினியை அடுத்து தேசிங்கு பெரியசாமி விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணையவிருந்தனர். தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைத்ததால் இவர்களின் கூட்டணி தள்ளி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.