Connect with us
 

News

மீண்டும் நானே வருவேன் படப்பிடிப்பில் தனுஷ் !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியவர்களின் கூட்டணியில் புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது ஒரு சிறு இடைவேளை கொடுப்பட்டு இருந்தது. அந்த இடைவெளியில்தான் தனுஷ் தெலுங்கில் ‘வாத்தி’ படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நேற்று ‘நானே வருவேன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது இதில் தனுஷ் கலந்து கொண்டார்.