News

திருமணத்தை நிறுத்திய தனுஷ் பட நடிகை !

Published

on

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. இதனை தொடர்ந்து நோட்டா, பட்டாஸ், படங்களில் நடித்து மிகவும் பிரபலமனார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேர பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தா. இவர்களின் காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மெஹ்ரீன் நான் பிஷ்னோவை திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து இவரின் சமூக வலைத்தளாத்தில் கூறியதாவது:- நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை.

இந்த முடிவு என் தனிப்பட்ட விஷயம் இதை அனைவரும் மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன் என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version