News

மீண்டும் திரைப்படம் இயக்க வரும் தனுஷ் !

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் கடந்த சில படங்கள் இவருக்கு தொடர் தோல்வி படமாக அமைந்து வருகிறது. நடிகர் என்பதை தாண்டி ஒரு இயக்குநராக இவர் முதல் இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி இதில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் மீண்டும் படம் நடிப்பதில் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படத்தை இயக்க தனுஷ் தயாராகவுள்ளார். இதற்கான திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும் படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் இயக்கும் இப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது. தற்போது ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version