News

மீண்டும் கேங்ஸ்டர் பட கதையில் நடிக்கும் தனுஷ் !

Published

on

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இப்படம் 1950-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதைகளத்தை கொண்ட திரைப்படமாக உருவாகவுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ராக்கி. இத்திரைப்படம் வருகிறது வெள்ளிக்கிழமை(டி.24) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் சாணிக் காயிதம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்கள்.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படமான மாறன் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளார். இதை தவிர செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாம்.

Trending

Exit mobile version