News

கொரோனா பாதிப்பால் தவிக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் தர்ஷா குப்தா !

Published

on

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. அதன் பின்னர் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமுலில் உள்ளாது. இதன் காரணமாக உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு கொடுத்து வருகிறார். ஒரு சில தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வோரு பகுதியிலும் இது போன்ற சேவைகளை செய்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக ராயபுரத்தில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். இது என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதை செய்துள்ளேன். அனைவரும் இது போன்ற உதவிகளை உதவ முன்வர வேண்டும்.

இது போன்ற கஷ்டமான நிலையில் என்னால் முடிந்த சிறு உதவிகளை செய்து அவர்களின் துயரை துடைத்து வருகிறேன் என்றார் தர்ஷா குப்தா.

Trending

Exit mobile version