Connect with us
 

News

இயக்குனர் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் !

Published

on

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஓடிடி தளத்துக்காக தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இயக்குனர் விஜய் அவர்களின் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ளா தலைவை திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி பின்னர் கொரோனா ஊரடங்கு காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ஆகும்.