News

மீண்டும் இணையும் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணி !

Published

on

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்குனர் ஜீத்து ஜோசப் இருவரும் இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லால் மற்றும் திரிஷாவை வைத்து ராம் என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜீத்து 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில். மீதமுள்ள படப்பிடிப்பு காட்சிகள் வெளிநாடுகளில் விரைவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

இந்நிலையில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘ருவல்த் மேன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஆண்டனி பெரம்பாசூர் என்பவர் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பை விரைவில் ஆரம்பித்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்துள்ளனராம் படக்குழு.

Trending

Exit mobile version