News

சமந்தா எங்கள் குடும்பத்திலிருந்த ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாத அழகிய தருணங்கள் – நாகர்ஜூனா !

Published

on

காதல் திருமணம் செய்து நான்கு வருடங்கள் மிகுந்த பாசத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்த நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளனர்.

இது பற்றி நாகசைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜூனா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்:-

கனத்த இதயத்துடன் இதை நான் பகிர்கிறேன் சமந்தா – நாகசைதன்யா இடையே ஏற்பட்ட இந்த பிரிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கணவன் – மனைவி இடையே நடக்கும் விஷயங்களில் நாம் தலையிட முடியாது அது அவர்களின் தனிப்பட்டவை.

ஆனலும் இருவரும் என்னுடைய பிரியத்திற்குரியவர்கள். சமந்தா எப்போதும் எங்கள் குடும்பம் உங்களை ஆதரிக்கும். சமந்தா எங்கள் குடும்பத்திலிருந்த ஒவ்வொரு நொடியும் மறக்க முடியாத அழகிய தருணங்கள். இந்த நெருக்கடியான சூழலில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க கடவுளை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Trending

Exit mobile version