News

ஷாலினி அஜித் குமார் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு !

Published

on

நடிகர் மற்றும் நடிகைகள் டுவிட்டர் மற்றும் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் கணக்குகள் வைத்து தங்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் புதிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் பெயரில் ரசிகர்கள் பலர் போலியான கணக்குகளை தொடங்கி பதிவுகளை செய்தும் வருவார்கள். அதை உண்மை என்று நினைத்து பல ரசிகர்கள் பிந்தொடர்வதும் நடந்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் அஜித்குமாரின் மனைவியும் நடிகயுமான ஷாலினி பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அதில் உங்களுக்குடன் டுவிட்டதில் இணைவதில் மகிழ்ச்சி என் அன்பான கணவருடன் முதல் பதிவை வெளியிடுகிறேன் என்று அஜித்துடன் ஷாலினி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிந்து ஷாலினி பெயரில் போலி பதிவையும் வெளியிட்டுள்ளனர்.

இதை உண்மை என்று நம்பி ஏமாற்று பல ரசிகர்கள் பின் தொடர ஆரம்பிந்தனர். இதில் நடிகை யாஷிகா ஆனந்தும் அடங்கும். இந்த டுவிட்டர் கணக்கை உண்மை என்று நம்பி டுவிட்டர் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் என்று பதிவிட்டார்.

இந்த நிலையில் ஷாலினி பெயரில் இருப்பது போலி கணக்கு என்றும் டுவிட்டதில் அவருக்கும் எந்த கணக்கும் இல்லை என்றும் அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெதிவித்துள்ளார்.

Trending

Exit mobile version