Connect with us
 

News

மீண்டும் உயிர் பெற்று திரும்பிய தமிழ் சினிமா !

Published

on

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புகளுக்கு ஏற்கனவே அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரிய படங்களில் படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.

விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பில் சென்னையில் நேற்று தொடங்கியது. விஜய் மற்றும் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அதன்பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தனுஷ் ஐதராபாத் சென்றுள்ளார்.

து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடக்கிறது. அதே போல கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் சென்னையில் ஆரம்பிக்கவுள்ளதாம்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டார். மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் படமாக்கப்படுகின்றன. அதே போல அஜித் குமாரின் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பையும் தொடங்கவுள்ளனர் படக்குழு.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு அடுத்த வாரம் நடக்கவுள்ளது. கார்த்தி நடிக்கும் சர்தார் விக்ரம் நடிக்கும் 60-வது படம் போன்ற படப்பிடிப்புகள் ஆரம்பிக்கவுள்ளது.தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட துணை நடிகர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் மட்டுமே படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.