News

முதல் முறையாக கிராமத்து கதையை எடுக்கும் கெளதம் மேனன் !

Published

on

கெளதம் மேனன் – சிம்பு இவர்களின் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களுமே வெற்றி படமாக அமைந்து. தற்போது இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்த காடு. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது.

முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் நதிகளிலே நீராடும் சூரியன். பின்னர் கதையில் சில மாற்றங்களை செய்ய தலைப்பும் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது இதில் சிம்பு ஆடு & மாடு மேய்க்கும் இளைஞன் தோற்றத்தில் காணப்படுகிறார்.

இந்த போஸ்டர் மூலம் இப்படம் கண்டிப்பாக ஒரு கிராமத்து கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இயக்குநர் கெளதம் மேனன் இதுவரையில் கிராமத்து வாசனை கொண்ட கதைகளை இயக்கியதில்லை இதுவே முதல் முறை.

Trending

Exit mobile version