Connect with us
 

News

சினிமாவில் என்னை நடிக்க வேண்டாம் என்றார் – துல்கர் சல்மான் !

Published

on

நடிகர் Dulquer Salmaan பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியின் மகன். தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மனி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைதொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தார், ஹேய் சினாமிகா படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் குறைவான படங்கள் என்றாலும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து அங்கு முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

Dulquer Salmaan நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘சீதா ராமம்’ இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 25 கோடிக்கு மேல் வசூல் செய்தி மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் Dulquer Salmaan தான் நடிகரான அனுபவத்தை ஒரு நேர்கானில் கூறியுள்ளார். ‘ நான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் என் அப்பாவுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. அதற்கு முன்னர் என் அப்பாவை நான் அப்படி கோபமாக பார்த்தது இல்லை. எனக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டையே நடந்தது. நீ சினிமாவில் நடிக்க வந்து என் மானத்தை வாங்காதே என்று கூறினார் அப்பா.

நீ நடனம் ஆடியோ இல்லை நடிக்க விரும்பியோ நான் பார்த்தது இல்லை. நடிப்பு என்றால் நீ நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் இல்லை. நடிக்கும் ஆசையை இதோடு விட்டு விடு என்று கூறினார். பயங்கரமாகவும் என்னை திட்டினார். உண்மையாகவே நான் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவரின் எதிர்ப்பை மீறியே நடிக்க வந்தேன் என்று கூறினார்’.