News

தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பில் கமல் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை !

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 4-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்டார்ஜ் ஆனார்.

டிஸ்சார்ஜ் ஆன கமல்ஹாசன் வீட்டுக்கு செல்லாமல் நேராக பூந்தமல்லியிலுள்ள பிக்பாஸ் அரங்கிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்தும் கொண்டார். முன்மை போல அன்றைய தினம் கமல்ஹாசனால் நிகச்சியை தொகுத்து வழங்கமுடியாமல் சற்று சிரமத்தை எதிர் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் மீண்டு வந்தால் 7 நாட்களுக்கு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அப்படி எதும் செய்யாமல் நேரடியாக படப்பிடிப்பிப்புக்கு கலந்து கொண்டார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version