Connect with us
 

News

திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் – நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவிப்பு

Published

on

தன் திருமண உறவிலிருந்து வெளியேறுகிறான் என நடிகை ஷீலா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு வெளியான ஆறாது சினம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷீலா. இப்படத்தை தொடர்ந்து டுலெட் திரைப்படம் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மலையாளத்தில் வெளியான கும்பலாங்கி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவுபதி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற ஜிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் லூர்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் எனது திருமண வாழ்க்கையிலிருந்து நான் வெளியேறுகிறேன் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் தன் கணவரையும் டாக் செய்திருந்தார். மேலும் தன் கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.