News

ஹிந்தியில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை – மகேஷ் பாபு !

Published

on

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரது படங்களை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். சில படங்களை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

தற்போது மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டதாக மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் நான் ஆணவத்தோடு பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். நிறைய இந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வ்ந்தன. ஆனால் நான் நடிக்கவில்லை. அவர்களால் இந்தியில் என்னை இந்தியில் நடிக்க வைக்க முடியாது.

இந்தி படங்களில் நடிப்பதற்காக எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நான் எப்போதும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். நான் நடிக்கும் தெலுங்கு படங்களை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. தெலுங்கு படங்கள்தான் எனது பலம் என்று கூறினார்.

Trending

Exit mobile version