Connect with us
 

News

எனக்கும் அரசியலுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை – த்ரிஷா !

Published

on

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் வருகிற 30-ம் தேதி த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ராங்கி. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி உள்ளார் த்ரிஷா துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் த்ரிஷா.

இதில் கலந்து கொண்டு பேசிய த்ரிஷா ‘எதற்கும் கொஞ்சம் கூட பயப்பிடாத கதாப்பாத்திரம் என்பதால் ராங்கி என படத்திற்கு பெயர் வைத்துள்ளோம். இதில் நான் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். கொரோனாவுக்கு பின்னர் கதா நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது அதிகரித்துள்ளது.

நான் அரசியலில் இணைய போவதாக செய்திகள் வெளியானது. அது முற்றிலும் வெறும் வதந்தி மட்டுமே. நான் எந்த கட்சியிலும் இணையபோவதில்லை. எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.