News

இனி நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் – நடிகை சார்மி !

Published

on

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகலும் அதிக படங்களில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு சார்மி விலகினார்.

சார்மி ஒரு பேட்டியில் கூறியதாவது நான் நடிப்பதை விட்டு சுமார் 5 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் வாரத்துக்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம்தாம் உள்ளன.

சினிமா துறையினர் இன்னும் என்னை கதாநாயகித்தான் பார்க்கிறார்கள். பட வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு நடிக்க விருப்பமில்லை. இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டென்.

ஓ.டி.டி தளங்கள் வந்த பிறகு உலகின் பல பகுதிகளில் உள்ள படங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள். இதனால் ரசிகர்கள் ரசனை மாறியுள்ளது. இதன் மூலம் புதுமாதிரியான கதைகளை வைத்து படங்கள் எடுப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் பெரிய பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்றுதான் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். இதை கருத்தில் வைத்து படம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும். என்னை பற்றி வதந்திகள் அளவுக்கு அதிகமாக வருகின்றன. என் குடும்பம் என்னை நம்புகிறார்கள் அதனால் கிசுகிசுக்களுக்கு நான் பயப்பிடுவதில்லை கவலைப்படுவதும் இல்லை என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version