News

யுவனிடம் அனுமதி கேட்கவே மாட்டேன் – விஷால் !

Published

on

புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் மலையாள நடிகய் பாபுராஜ் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வீரமே வாகை சூடும் திரைப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த மாதம் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் விஷால் நான் எப்போதும் புது முக இயக்கநர்கள் படத்தில் நடிக்கும் போது யுவன் சங்கர் ராஜா மட்டும்தான் இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கூறிவிடுவேன். இதற்காக நான் யுவனிடம் எந்த அனுமதியும் கேட்க மாட்டேன் கட்டாயமாக சொல்லிவிடுவேன் காரணம் யுவன் என் நெருங்கிய நண்பர் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய விஷால் நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.

ரவீனாவை என்னைப்போல் யாரும் படப்பிடிப்பில் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டார்கள். திறமையாக நடித்திருந்தார்.மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார்.

மாரிமுத்து என்னிடம் நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார்.அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு.வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர் மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார்.

என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை கோவில்.என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன் என்றார்.

Trending

Exit mobile version