Connect with us
 

News

பணம்தான் முக்கியம் என்று சொல்வேன் – ஆத்மிகா !

Published

on

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன் மின்னர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் இதுவரைக்கும் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்துள்ள கண்ணை நம்பாதே படம் வரும் வெள்ளி அன்று வெளியாகிறது. இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் கண்ணை நம்பாதே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார்.

ஆனால் அதற்காக தற்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு சாதணமான நல்ல மனிதராக இருந்தால் போதும் பணமா, புகழா எது முக்கியமென்றால் பணம்தான் முக்கியன் என்பேன் ஏனெனில் அதுதான் எதார்த்தம் என்று கூறினார்.