Connect with us
 

News

என் கணவர் சொன்னால் நடிப்பதை நிறுத்தி விடுவேன் – காஜல் அகர்வால் !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். முதன் முதலில் இயக்குனர் பேரரசு இயக்கிய பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நாயகியாக நடித்துவிட்டார். இறுதியாக இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்தி வருகிறார்.

கடந்த வருடம்தான் இவரின் நெருங்கிய நண்பரான கவுதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று. சமீபத்தில் ரசிகர்களுடான இணையவழி கலந்துரையாடலில் காஜல் அகர்வால் பேசினார். அப்போது தான் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து பேசியுள்ளார்.

காஜல் அகர்வால் கூறியதாவது: என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இதனால் என்னால் சுலமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனாலும் இன்னும் எத்தனை காலம் சினிமாவில் நான் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது.

என் கணவர் கவுதம் என்னை கேட்டுக்கொண்டால் நான் அந்த நொடியே சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன். அதுவரை நான் ஒப்பந்தமான படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளேன். இயழ்பு சூழலுக்கு நாடு திரும்பியதும் மீண்டும் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் என்று கூறினார் காஜல் அகர்வால்.