News

சேகர் கம்முலாவுடன் இணைந்து பணியாற்ற உண்மையிலேயே நான் ஆர்வமாக இருக்கிறேன் !

Published

on

தனுஷ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் சிறந்த இயக்குனருக்காக தேசிய விருது பெற்றவர். இதர நடிகர் நடிகைகள் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னை கவர்ந்த இயக்குனர்களின் ஒருவர் சேகர் கம்முலா. அவருடன் இணைந்து பணியாற்ற உண்மையிலேயே நான் ஆர்வமாக இருக்கிறேன். 3 மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் நடிப்பதை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரி-2 பாகம் படத்தில் தனுஷ் சாய் பல்லவி ஜோடியாக நடித்திருந்தனர்.

அந்த படத்தில் இருவரும் இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடல் யூ-டியூப் தளத்தில் சாதனை நிகழ்த்தியது.

Trending

Exit mobile version