Connect with us
 

News

மீண்டும் திரையரங்குகள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது !

Published

on

கொரோனா மூன்றாம் அலை தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரம் சில ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்ட நிலையில் இன்று புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தமிழகத்தில் நீட்டு அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி தமிழகத்தில் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்க அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கள் திருநாளில் 8 திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. தற்போது அதற்கான விளம்பர வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென திரையரங்குகள் மூடப்பட்டால் வெளியாகவிருக்கும் அனைத்து திரைப்படங்களின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி மூடப்பட்டால் இதில் பல திரைப்படங்கள் வழக்கம் போல ஓடிடி தளங்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில் மறுபடியும் மூடப்படவுள்ளதால் திரையுலகினரும் திரையரங்கு உரிமையாளர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.