Connect with us
 

News

குடிப்பதை நிறுத்தி ஒரு வருடமாகிறது – சிலம்பரசன் !

Published

on

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மாநாடு. தற்போது யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவெற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு படக்குழுவினர் டுவிட்டரில் ஸ்பேஸில் கலந்துரையாடினர் அதில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாடு படம் குறித்த பட விஷயங்களை பேசிய சிம்பு மன்மதன் படத்துக்கு பின் மாநாடு படத்தில் அழுது நடித்துருக்கிறேன். ஷாட் நடித்து முடிந்த பின்னும் அழுது கொண்டே இருந்தேன்.

மாநாடு படத்தில் ஒய்ஜி மகேந்திரனும் எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பில் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள். இன்றுடன் நான் குடிப்பதை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது.

இந்த படத்தில் சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி மன்மதன் படத்துல மொட்டை மதன் கேரக்டர் அழுதுக்கிட்டே பேசுற மாதிரி காட்சிலதான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.

சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்ணு அடிக்கனும் ஆனா இப்ப அந்த காட்சிக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது. அந்த காட்சி முடிஞ்சிருச்சுன்னு கூட அழுகையை நிப்பாட்ட முடியல.