Connect with us
 

News

எடிட்டர் மோகன் குடும்பம் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி !

Published

on

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைபடுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் கோரிக்கை விடுத்தார்.

அதை தொடர்ந்து சிவகுமார் குடும்பம் ரூபாய் 1 கோடி முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை கொடுத்தனர். அதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாச் 25 லட்சம், வெற்றிமாறன், 10 லட்சம், அஜித் குமார் 25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.1 கோடி, வழங்கினர்.

கொரோனா நிதியுதவு பட்டியல் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.25 லட்சம் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் எடிட்டர் மோகன் அவரின் மகன்களான நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் மோகன் ராஜா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 நிதியுதவி தொகையை வழங்கினர்.