Connect with us
 

News

குடித்து விட்டு போலீஸ் அதிகாரிகளுடன் ரகளை செய்த ஆரவ் பட நடிகை !

Published

on

இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் ஆரவ் நடித்து வெளியான திரைப்படம் ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ இப்படத்தில் ஜோடியாக நடித்தவர் காவ்யா தாபர். மும்பையை சேர்ந்த இவர் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு விருந்தில் கலந்து விட்டு ஆண் நண்பர்களுடன் தனது காரில் வீடு திரும்பினார்.

அப்போ சாலை ஓரம் நின்ற கார் மீது இவர்களின் கார் மோதியது. இதனையடுத்து இந்த சம்பவம் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் காவ்யா தாபரை விசாரித்த போது அவர் மது அருந்தி விட்டு கார் ஓட்டியது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்ற போது அவர்களுடன் காவ்யா தாபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு இருந்த பெண் காவலர்களின் ஆடையைகளி கிழித்து பிரச்சனை செய்துள்ளார்.

இதனையடுத்து அவரை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர் அந்தேதி மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.