News

மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல் வடிவேலு !

Published

on

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அதில் நடிக்க மறுத்து விலகியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் 10 வருடங்களுக்கு மேலாக நடிக்காமல் இருந்து வருகிறார் வடிவேலு. இந்த நிலையில் வடிவேலுக்கு எதிரான புகார் மீது தற்போது தீர்வு ஏற்பட்டு தடை நீங்கியுள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்க சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் 23-ம் புலிகேசி இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்த வடிவேல் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் வடிவேல் மற்றும் எஸ்.பிக்சர்ஸ் பட நிறுவனத்தினரை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தடை நீங்கியதால் சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் வடிவேல் விரைவில் நடிக்கவுள்ளார்.

Trending

Exit mobile version