News

சிம்பு மீது இருந்த ரெட் கார்ட் நீக்கம் சமாதானம் ஆனார்களா இரு தரப்பும் !

Published

on

தயாரிப்பாளர் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த திரைப்படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இப்படத்திற்கு சிம்பு முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை இதன் காரணமாக இப்படம் பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இந்த நஷ்டத்துக்கு சிம்பு பொறுப்பேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகாரை கொடுத்தார்.

இதை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இதன் எதிரொலியாக தற்போது கெளதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திற்கு பெப்சி சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது என்று அறிவித்தது. இதனால் திரையுலகில் பலர் அதிச்சிக்குள்ளானர்கள். இதுக்கு சிம்புவின் தாயான உஷா ராஜேந்தரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு தரப்பில் இருந்தும் தயாரிப்பாளார் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்புவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. தற்போது சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பெப்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version