News

விரைவில் திரிஷாவுக்கு திருமணம் ?

Published

on

பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, மவுனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியானார். அதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக நடிதார். அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியானார்.

இப்போது பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். திரிஷாவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு. அவர் தாய் உமாவுடன் சென்னை நந்தனத்தில் வசித்து வருகிறார். அவருக்கு உடன் பிறன்வர் என்று யாருமில்லை வீட்டில் ஒரு செல்ல பிள்ளை.

நடிப்பில் 100 படங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் திரிஷா இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். என்ன காரணமோ தெரியவில்லை அவருடைய திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது.

திரிஷா மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். சமீபகாலமாக வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தில் ஏறுவது போல திரிஷா புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது திரிஷாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் அதனால்தான் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

Trending

Exit mobile version