News

மீண்டும் உங்களுடன் பணியாற்றும் நாளை எதிர்பார்க்கிறேன் – ஜெயம் ரவி !

Published

on

மணிரதனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் தயாராகி வருகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜெயம் ரவி தனது காட்சிகளை முழுமையாக நடித்து கொடுத்து விட்டார். டுவிட்டரில் மணிரத்னத்தை பாராட்டி ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில் தலைமை பண்பும் கற்றலும் ஒன்றுகொன்று முக்கியத்துவம் வாய்தவை. நீங்கள் இந்த பிரமாண்டமான படைப்பை நேர்த்தியோடு உருவாக்கி சுற்றி இருப்பவர்களுக்கும் கற்றுக் கொடுத்ததை நான் பார்த்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

உங்களுடைய ஆசிர்வாதம் மற்றவர்கள் மீது அக்கறை காட்டும் பண்பு என்மீது வைத்த நம்பிக்கை போன்றவற்றுக்கு நன்றி. உங்களுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்க முடியாதது வருத்தம் மீண்டும் உங்களோடு பணியாற்றம் நாளை எதிர்பார்க்கிறேன்.

பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு பாகம் அல்ல இரண்டு பாகங்களும் முடிந்து விட்டன. கனத்த இதயத்தோடு அடுத்த புதிய தொடக்கத்துக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.இப்படத்தில் ஜெயம் ரவி வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.

Trending

Exit mobile version