Connect with us
 

News

புதிய த்ரில்லர் கதையில் நடிக்கும் நயன்தாரா !

Published

on

நடிகை நயன்தாரா ஜோடியாகவும் முதன்மை வேடங்களிலும் நடித்து வருகிறார். அப்படி இவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படங்கள்தான் மாயா, ஐரா, டோரா போன்ற படங்கள்.

தற்போது நயன்தாரா இன்னோரு திகில் படத்தில் நடித்து வருகிறார். குடும்ப உறவுகள், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட திகில் படமாக உருவாகிறது இந்த படம். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குநர் விக்னேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் ஒரே கட்டமான நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். நயன் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறது. இதை தவிர நயன்தாரா மேலும் 6 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இரண்டு தெலுங்கு படங்களும் அடங்கும்.