News

16 வருடங்களுக்கு பின்னர் நடிக்க வரும் லைலா !

Published

on

தமிழில் கள்ளழகர் படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை லைலா. தந்தா, மவுனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்து இருவரும் பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டனர்.

பிதாமகன் படம் லைலாவுக்கு பல விருதுகளையும் பெற்று கொடுத்தது. அஜித்குமாருடன் பரமசிவன் படத்திலும் திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், காமராசு, கண்ட நாள் முதல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். லைலாவுக்கு மெக்தின் என்ற தொழில் அதிபருடன் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒருங்கி இருந்தார். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு லைலா மீண்டும் நடிக்க வந்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைலா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version