Connect with us
 

News

கண் தானம் செய்துள்ள மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் !

Published

on

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

காலையில் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்க்கு சென்ற புனித் குமார் அங்கு திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். அதன் பின்னர்தான் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த புனித் குமார் ராஜ்குமாரின் 3-வது மகன் இவர் சிறு வயதிலிருந்தே படங்களில் நடித்து வருகிறார். 1975-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி பிறந்த இவர் தந்தையின் பல படங்களில் குழந்தை நட்ச்சத்திரமாக நடித்துள்ளார்.

2002-ம் ஆண்டு அப்பு என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக கன்னடத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவரின் கடீன உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வந்தார்.

இன்றுவரை மொத்தமாக 49 படங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தை போலவே புனித் அவர்களும் இவரின் கண்களை தானம் செய்துள்ளார்.

இவரின் உடல் கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக உவரின் உடல் வைக்கப்படுகிறது.