Connect with us
 

News

மாநாடு தனிப்பட்ட முறையில் என் இதயத்திற்கு நெருக்கமானதும் – யுவன் ஷங்கர் ராஜா !

Published

on

கடந்த வாரம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதே போல வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் சிலம்பரசனுக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி இந்த திரைப்படம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் நன்றி தெரிவித்து வரும் நிலையில் இப்படத்திற்கு இந்த அளவு வெற்றி கிடைக்க முக்கிய காரணமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது கூறியதாவது:-

இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன் இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில் என் இதயத்திற்கு நெருக்கமானதும் மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும்.

வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் தனித்தனியே இணைந்த, எனது முந்தைய படங்களில் எண்ணற்ற வெற்றி பாடல்கள் இருந்தன, ஆனால் எங்கள் கூட்டணியில் ஒரு திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் இருப்பது இதுவே முதல் முறை. ஆனாலும், இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் BGM இல் எனது புதிய முயற்சிகளை கூர்மையாக கவனித்து, அவற்றை தனித்த முறையில் பாராட்டியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது.

என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் ஆகியோருக்கு நன்றி. எனது நண்பர் மற்றும் சகோதரரான சிலம்பரசன் இந்த திரைப்படத்திற்காக தந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பிற்காக உழைப்பிற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவரது உழைப்பிற்கும் முயற்சிக்கும் அனைத்து தரப்பிலும் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதை கண்டு நான் இதயம் நெகிழ்ந்து மகிழ்கிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் தனது முழு நடிப்பு ஆற்றலையும், இந்தப் படத்தில் பயன்படுத்தியதன் மூலம் படத்திற்கு வலுவானதொரு தூணாக மாறியுள்ளார். மாநாடு படத்தினை சிறப்பான ஒரு படைப்பாக மாற்ற ஒவ்வொரு கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எனது இசை பற்றியும் மற்றும் படம் பற்றிய நேர்மறையான செய்தியைப் பரப்பியதற்காக விமர்சகர்கள் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

“நீங்கள் உண்மையாக தேடி அலைவது, உங்களைத் தேடி வந்தடையும் ” என்று ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. மாநாடு திரைப்படத்தின், ஒட்டுமொத்த குழுவிற்கும் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பும் பாராட்டுக்களும், கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி.