News

பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து சொன்ன தேதியில் வெளியானது மாநாடு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இன்று வெளியாகவிருந்த திரைப்படம் மாநாடு. ஆனால் நேற்று திடீரென இந்த படம் இன்று வெளியாகது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த பணப்பிரச்சனை குறித்து விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இன்று இப்படம் சொன்ன தேதியில் வெளியாகிறது.

ஆனாலும் இன்று காலை 5 மணிக்கு முதல் காட்சி என்று இருந்தது அதை ரத்து செய்து விட்டு 8 மணிக்கு முதல் காட்சியை வெளியிட்டது படக்குழு.

இது குறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளார் சுரேஷ் காமாட்சி கூறுகையில் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்து விட்டதாகவும் வெளியீடு சிறிது காலதாமதம் ஆனதற்கு மிகவும் வருந்துதாகவும் கடவுளின் அருளால் இன்று மாநாடு படம் வெளியானது என்று கூரியுள்ளார்.

மாநாடு படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல கருத்துக்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார்கள். அப்படி என்றால் படமும் நன்றாகத்தானெ இருக்கிறது என்று அர்த்தம்.

Trending

Exit mobile version